Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் வெற்றி யாருக்கு? கையைப் பிசையும் கங்குலி!

Advertiesment
சஹால்
, வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (08:01 IST)
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  இந்த அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது. அந்த போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து ஆர்வம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பது பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார்.

அதில் “இரு அணிகளும் சமபலம் கொண்ட அணிகள். அதில் எந்த அணி வெற்றி பெறும் என்பதைப் பற்றி கூற முடியாது. போட்டி நடக்கும் நாளில் நன்றாக விளையாடுகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும். இந்திய அணியில் அக்சர் படேலுக்கு இடம் கொடுத்திருப்பது நல்ல முடிவாகும். அவரால் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யவும் முடியும்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் போட்டியில் இவர் நிச்சயம் தேவை… சஞ்சய் மஞ்சரேக்கர் பரிந்துரைக்கும் வீரர்!