Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இங்கிலாந்து: 3வது டெஸ்ட் நிலவரம்

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (16:32 IST)
முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இங்கிலாந்து
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தது என்பதும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் என்பதால் தற்போதைக்கு இந்த தொடர் சமநிலையில் உள்ள என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் மான்செஸ்டர் நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தை அதை அடுத்து இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் ரோச் பந்துவீச, இங்கிலாந்து அணியின் புகழ்பெற்ற பேட்ஸ்மேன் சிப்லே எதிர்கொண்டார். முதல் ஓவரில் முதல் 5 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆறாவது பதிலாக எல்பிடபிள்யூ முறையில் சிப்லே அவுட்டானார். இதனால் இங்கிலாந்து அணி அதிர்ச்சிக்குள்ளாக்கியது
 
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிப்லே மிக அருமையாக விளையாடினார் என்பதும் ஒரு இன்னிங்ஸில் 120 ரன்களை குவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்வரை இங்கிலாந்து அணி 12 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments