Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி… நான்காவது போட்டியில் தோற்றாலும் இந்தியாவுக்கு வாய்ப்பு – எப்படி தெரியுமா?

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (15:42 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் முன்னணியில் இருந்தன. ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த ஆஸி பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில் இப்போது இந்தியாவிடம் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து தோற்றதை அடுத்து அந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. ஒருவேளை நான்காவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றாலும் அது ஆஸி அணி இறுதிப் போட்டிக்கு செல்லவே வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது ஆஸ்திரேலிய அணியும் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு மங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கொரோனாவைக் காரணம் காட்டி ரத்து செய்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதையடுத்து அதன் மீது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது. அதில் ஆஸி கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் ஆஸி அணிக்குப் புள்ளிகள் குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஒருவேளை இதை ஐசிசி செயல்படுத்தினால் நான்காவது போட்டியில் இந்தியா தோற்றால்கூட ஆஸியால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாது; இந்தியாதான் செல்லும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments