Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநகரத்து இளைஞர்களுக்கான வாய்ப்பை தோனிதான் உருவாக்கினார் – காங்கிரஸ் தலைவர் வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (11:05 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓராண்டுக்கு மேலாக ஆன நிலையில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து இரு நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளுக்காக  சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் தோனி சென்னை வந்த தோனி, இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் ‘சிறுநகரங்கள், கடைக்கோடி நகரங்களில் இருந்து வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள் என்றால் அதற்கான கதவுகளை திறந்துவிட்டது தோனிதான்.’ எனக் கூறி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

இனி சி எஸ் கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்… சேவாக்கின் நக்கல் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments