Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பில்லை – காரணம் இதுதான்!

டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பில்லை – காரணம் இதுதான்!
, வியாழன், 31 டிசம்பர் 2020 (17:01 IST)
உமேஷ் யாதவ்வுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் அவருக்குப் பதில் யார் சேர்க்கப்படுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இடது முழங்காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்புக் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகினார். அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் அவர் இரு வாரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் இடம்பெற மாட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கு பதிலாக தமிழக அணியைச் சேர்ந்த நடராஜனுக்கு வாய்ப்பளிகப்படலாம் என சொல்லபட்டது. ஆனால் இப்போது ஷர்துல் தாக்கூருக்குதான் வாய்ப்பளிக்கப்படும் என சொல்லப்படுகிறது. நடராஜனுக்கு போதுமான அளவுக்கு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அனுபவம் இல்லை என்பதால் தாக்கூருக்கு வாய்ப்பளிக்கபடும் என சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஹித்துக்கு வழிவிடப் போவது யார்? இந்திய அணியில் அடுத்த குழப்பம்!