Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டிக்கு சில நிமிடங்களுக்கு திடீரென விலகிய செரினா வில்லியம்ஸ்

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (22:28 IST)
அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை எதிர்த்து இன்று பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் தொடரில் 4வது சுற்றில் விளையாட இருந்தார்.
 
குழந்தை பெற்ற பின்னர் செரினா பங்கு கொள்ளூம் முதல் தொடர் என்பதாலும், பல ஆண்டுகளுக்கு பின் அவர் ஷரபோவாவுடன் மோதும் போட்டி என்பதாலும் இந்த போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
 
ஆனால் இந்த போட்டி தொடங்குவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன் இந்த போட்டியில் இருந்து தான் விலகுவதாக செரினா வில்லையம்ஸ் அறிவித்தார். இதனால் டென்னிஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
கடந்த சனிக்கிழமை நடந்த 3வது சுற்றின்போதே தோள்பட்டையில் காரணம் ஏற்பட்டதாகவும், ஞாயிறு அன்று நடைபெற்ற இரட்டையர் போட்டியில் விளையாடும்போது அந்த காயம் தீவிரம் அடைந்ததாகவும், சர்வீஸ் போட முடியாத அளவுக்கு வலி இருந்ததால் இந்த போட்டியில் இருந்து விலகுவதாகவும் செரீனா தனது ரசிகர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
 
செரினா போட்டியில் இருந்து விலகியதை அடுத்து மரியா ஷரபோவா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments