Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் குடும்பத்திற்கு ரூ. 1.5 லட்சம் நிதியுதவி - வீரேந்திர சேவாக்

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (12:36 IST)
கேரளாவில் அரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் குடும்பத்திற்கு கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ரூ. 1.5 லட்சம் நிதியுதவி அளிக்க  உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதி பொதுமக்கள்,  அரிசி திருடியதாக கூறி மது என்ற ஆதிவாசி நபரை அடித்து கொன்றனர். ஆனால் அரிசி திருடியதாக அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு தவறானது என்று தெரிய வந்ததால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
அவர் அடித்து கொல்லப்படுவது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளங்களில் பார்த்த மக்கள், மதுவை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர். கேரள முதல்வர் பினராஜி விஜயன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் மதுவின் தங்கைக்கு போலீஸ் பணி வழங்கப்பட்டது. 
இச்சம்பவத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர், வீரேந்திர சேவாக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் வீரேதர் ஷேவாக் வரும் 11 ஆம் தேதி, மதுவின் தாயாரை நேரில் சந்தித்து ரூ. 1.5 லட்சத்திற்கான காசோலையை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments