Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேரனை துவைச்சு தொங்க போட்டாச்சு! இனி மகனுக்கு ஆப்புதான்: சேவாக்

பேரனை துவைச்சு தொங்க போட்டாச்சு! இனி மகனுக்கு ஆப்புதான்: சேவாக்
, வியாழன், 15 ஜூன் 2017 (23:06 IST)
ஒரு போட்டியின் வெற்றி தோல்வியை சேவாக் அளவுக்கு கலாய்க்க யாராலும் முடியாது என்பதை அவரது இன்றைய டுவீட்டை பார்த்தவர்களுக்கு தெரியும். இன்று நடைபெற்று இந்தியா, வங்கதேச போட்டியில் வங்கதேசத்தை இந்தியா துவம்சம் செய்தது.





இதுகுறித்து தனது கருத்தை டுவிட்டரில் கூறிய சேவாக், ' ஒரே வீட்டில் நடக்கும் சண்டையில் அரையிறுதி வரை வந்த சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் பேராண்டி, இனி அப்பாக்கள் தினத்தில் மகனுடன் பைனல் மிச்சமுள்ளது. இதை சீரியஷாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து பிரிந்த நாடுகளான  பாகிஸ்தானை மகன் என்றும் பாகிஸ்தானில் இருந்து பிரிந்த நாடான  வங்கதேசத்தை பேரன் என்றும்  வேடிக்கையாக குறிப்பிட்டு சேவாக் கலாய்த்ததை டுவிட்டர்வாசிகள் பலரும் ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கதேசத்தை எளிதாக வென்ற இந்தியா