Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டுக்குள் செல்ல முடியாது – உலக கோப்பைத் தொடர்தோல்வியால் கடுப்பான சர்பராஸ் அகமது !

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (11:52 IST)
பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் மிக மோசமாக விளையாடிவரும் நிலையில் அந்த நாட்டி அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது சக வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகக்கோப்பைத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா தக்க வைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7 முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தியாவோடு தோல்வி மற்றுமல்லாமல் இந்த தொடர் முழுவதுமே மோசமாக விளையாடி பாகிஸ்தான் 9 ஆவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி அரையிறுதிக்கு செல்வது கடினம்தான் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பாக். கேப்டன் சர்பராஸ் அகமது பாகிஸ்தான் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘இது போல மோசமாக விளையாடினால் மக்கள் நம்மை நாட்டுக்குள் விடமாட்டார்கள். மோசமான விளையாட்டைக் கைவிட்டு நாம் சிறப்பான ஆட்டத்தை விளையாட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணி மோசமாக தோல்வி அடைந்த போது நேரடியாக பாகிஸ்தானுக்கு செல்லாமல் வெளிநாடுகளில் தங்கி பின்னர் தாமதமாகதான் நாட்டுக்குள் சென்றனர் என்பது வரலாறு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments