Webdunia - Bharat's app for daily news and videos

Install App

SA20 கிரிக்கெட் தொடர்: 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப்ஸ்..!

Siva
வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (09:42 IST)
SA20 கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது.

நேற்று நடைபெற்ற குவாலிபயர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த  போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த அணி ஏற்கனவே இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.  

நேற்றைய போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் விளையாடியது. 19.2 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் நாளை நடைபெறும். இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் எம்‌ஐ‌சி‌டி அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments