Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபா குருநாத் மெய்யப்பன் – தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத் தலைவராக போட்டியின்றித் தேர்வு !

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:35 IST)
பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் மெய்யப்பன் தமிழ்நாடு கிரிக்க்ட் வாரியத்தின் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்ய லோத கமிட்டி சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அவற்றில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவிகளில் இருக்கக்கூடாது, ஒரே நபர் இரண்டு பதவிகள் வகிக்கக்கூடாது என்பன முக்கியமானவை. இதையடுத்து தமிழகக் கிரிக்கெட் வாரியத்துக்கான தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு ரூபா குருநாத் மெய்யப்பன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவருக்கு எதிராக கடைசி நாளான நேற்றுவரை யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. அதனால் அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் மாநில கிரிக்கெட் சங்கம் ஒன்றில் தலைவரான முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் முன்னாள் பிசிசிஐ தலைவரும் இந்தியா சிமெண்ட்ஸ் அதிபருமான சீனிவாசனின் மகள் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments