Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு போட்டியில் கூட விளையாடதவர்களுக்கு ரூ.5 கோடி.. பரிசுப்பணம் ரூ.125 கோடியை பிரித்தது எப்படி?

Siva
திங்கள், 8 ஜூலை 2024 (19:05 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்ற நிலையில் அந்த அணிக்கு 125 கோடி பிசிசிஐ பரிசாக கொடுத்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பணத்தை எவ்வாறு பிரித்து வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

இதன்படி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், சாஹல் ஆகியோர் ஒரு போட்டியில் கூட  விளையாடாத நிலையில் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேட்டிங், பில்டிங், பௌலிங் பயிற்சியாளர்களுக்கு தலா 2.5 கோடியும், உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்,  டிரைனர்கள் ஆகியோர்களுக்கு தலா 2 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு குழுவில் உள்ளவர்களுக்கு தலா ஒரு கோடியும், ரிசர்வ் வீரர்களுக்கு தலா ஒரு கோடியும் வழங்க பிசிஐ முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி ஐசிசி சார்பில் ஏற்கனவே 20 .42 கோடி இந்திய அணிக்கு பரிசாக வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments