Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீயாய் நடந்த 90 நிமிட ஆட்டம்! மெஸ்சி அணியை வீழ்த்திய ரொனால்டோ!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (11:09 IST)
ஐரோப்பாவின் புகழ்பெற்ற யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மெஸ்சியின் பார்சிலோனா அணியை வீழ்த்தியது ரொனால்டோவின்  ஜுவெண்டஸ் அணி.

ஐரோப்பாவின் புகழ்பெற்ற யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பார்சிலோனா அணிக்கும், ஜுவெண்டஸ் அணிக்கும் இடையேயான போட்டி நேற்று பார்சிலோனாவின் கேம்ப் நௌவில் நடந்தது. உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர்களான லியோனல் மெஸ்சி, க்ரிஸ்டினோ ரொனால்டோ ஆகியோர் எதிரெதிர் அணியில் விளையாடுவதால் இந்த ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே பார்சிலோனா அணி சிறப்பாக விளையாடினாலும் அவர்களை கோல் போட விடாமல் ஜுனெண்டஸ் அணி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது.

முதல் 13வது நிமிடத்தில் ஜுவ்னெடஸ் அணியின் ரொனால்டோ ஒரு கோல் போட ஆட்டத்தின் போக்கை ஜுவெண்டஸ் கைக்குள் கொண்டு வந்தது. தொடர்ந்து பார்சிலோனாவின் முயற்சிகளை முறியடித்து 0-3 என்ற கோல் கணக்கில் வென்றது ஜுவெண்டஸ். அணிக்காக இரண்டு கோல்கள் போட்ட ரொனால்டோ ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மெஸ்சி ஒரு கோலாவது போட்டு விடுவார் என எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments