Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட்மேன் இல்லாத ஒருநாள் தொடர் – இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு !

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (20:08 IST)
நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா தசைப் பிடிப்புக் காரணமாக விலகியுள்ளார்.

நியுசிலாந்தில் டி 20 போட்டிகளை முடித்துள்ள இந்தியா அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடஇருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.

கடைசியாக நடந்த டி 20 போட்டியின் போது ரன் எடுக்க ஓடிய போது ரோஹித் ஷர்மா காலில் தசைப் பிடிப்புக் காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின் பந்துவீச்சின் போதும் அவர் களத்துக்கு வரவில்லை.

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் முழுதாக குணமடையாததால் அவர் 5 ஆம் தேதி நடக்கும் ஒருநாள் தொடரில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். இந்திய அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments