Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது சும்மா ட்ரெய்லர்தான்! அடுத்த வருஷம்தான் சம்பவமே இருக்கு! – ரோகித் சூசகம்!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (13:07 IST)
இந்தாண்டில் அதிக ரன்கள் அடித்த சாதனையை படைத்துள்ள ரோகித் ஷர்மா இதை விட அடுத்த ஆண்டு சிறப்பாக ஆடப்போவதாக தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த தொடரில் அபாரமாக ஆடி ரன்கள் பெற்ற ரோகித் ஷர்மா தொடரின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

மேலும் இந்த ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் ரோகித் ஷர்மா பெற்றுள்ளார். 1997ம் ஆண்டு இலங்கை வீரர் ஜெயசூர்யா 2,387 ரன்கள் பெற்றதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. தற்போது இந்த சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ரோகித் சர்மா ”இந்த ஆண்டு நான் ஆடிய பேட்டிங்கை நானே ரசித்தேன். இது இத்தோடு முடிந்து விடவில்லை. அடுத்த ஆண்டு இதை விட சிறப்பான ஆட்டம் தொடரும். இந்தியா உலக கோப்பை  மட்டும்தான் வெல்லவில்லையே தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடியுள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பேட்டிங்கில் அதிரடி காட்டாத ஐதராபாத்.. ராஜஸ்தானுக்கு எளிய இலக்கு..!

இறுதி போட்டிக்கு செல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு! ப்ளேயிங் 11 அப்டேட்!

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments