Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெறும் 6 பந்துகள் எதிர்க்கொண்டு உலக சாதனை படைத்த ரோகித் சர்மா

வெறும் 6 பந்துகள் எதிர்க்கொண்டு உலக சாதனை படைத்த ரோகித் சர்மா
, திங்கள், 9 அக்டோபர் 2017 (13:37 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைப்பெற்ற முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா சிக்ஸரில் உலக சாதனை படைத்தார்.


 

 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே முதல் டி20 போட்டி ராஞ்சில் சனிக்கிழமை நடைப்பெற்றது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 7 பந்துகளில் 11 ரன்கள் குவித்து வெளியேறினார். 
 
இவர் எதிர்க்கொண்ட 6 பந்துகளில் ஒரு சிக்ஸர் விளாசினார். இதன்மூலம் இவர் சிக்ஸரில் உலக சாதனை படைத்தார். வெகு நாட்கள் கழித்து பழைய ஃபார்ம்க்கு வந்துள்ள ரோகித் சர்மா நடந்து முடிந்த ஒருநாள் போட்டி தொடரில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 
 
முதலாவது டி20 போட்டியில் வெறும் 7 பந்துகள் மட்டுமே எதிர்க்கொண்டார். 7வது பந்தில் போல்டானார். 6 பந்துகளில் 11 ரன்கள் குவித்தார். அதில் ஒரு சிக்ஸர் அடங்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச அளவில் 30 சிக்ஸருக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
 
ஆஸ்திராலிய அணிக்கு எதிராக விளையாடும் டி20 போட்டிகளில் இந்திய அணி மற்றும் வீரர்கள் பல சாதனைகள் படைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 வீரர்களை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர். ஆஸ்திரேலிய வீரர் சாதனை