மும்பை சித்தி விநாயகர் கோவிலில் உலகக்கோப்பை.. ரோஹித் சர்மா, ஜெய்ஷா சாமி தரிசனம்..!

Siva
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (07:37 IST)
சமீபத்தில் உலக கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் இந்தியாவுக்கு வாழ்த்துகள் குவிந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் உலகக் கோப்பையுடன் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, மும்பை சித்தி விநாயகர் கோவிலில் உலகக்கோப்பையுடன் தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2007 ஆம் ஆண்டு பிறகு 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments