Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோகித், பாண்டியா அதிரடியில் இந்தியா வெற்றி!

Webdunia
ஞாயிறு, 8 ஜூலை 2018 (22:04 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியுள்ளது.
 
முதல் போட்டியிலும் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்ற நிலை இருந்தது.
 
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரரான ரோகித் சர்மா ஆரம்பம் முதல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தவான் மற்றும் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் இறங்கிய ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments