Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியை விட ரோகித் சிறந்த பேட்ஸ்மேன்; சந்தீப் பட்டில்

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (20:11 IST)
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியை விட ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் என்று முன்னாள் இந்திய வீரர் சந்தீப் பட்டில் தெரிவித்துள்ளார்.

 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று சில நாட்களுக்கு முன் கேள்வி எழுந்தது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று குறிப்பிட்டுவது சிரமம்.
 
இந்திய அணியில் ரோகித் சர்மா ஆதிரடியாக ரன் குவிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். மூன்றாவது இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். 
 
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்தீப் பட்டில் கூறியதாவது:-
 
விராட் கோலி ரசிகர்கள் இதை விரும்ப மாட்டார்கள். ஆனால் ரோகித் சர்மாதான் தற்போது சிறந்த ஒருநாள் மற்றும் டி20 பேட்ஸ்மேன். விராட் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர் இந்தியாவின் டெஸ்ட் பேட்ஸ்மேன். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியை எடுத்துக்கொண்டால் ரோகித் சர்மா அவரை முந்துகிறார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments