Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டெஸ்ட்: அரைசதம் அடித்து நம்பிக்கை கொடுத்த ரோஹித் சர்மா!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (20:31 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் எடுத்து இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளார் 
 
இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்துள்ளது. இந்த நிலையில் 354 ரன்கள் பின்தங்கியிருந்த இந்திய அணி தனது 2வது இன்னிங்சை என்று தொடங்கி விளையாடி வருகிறது
 
சற்றுமுன் வரை இந்திய அணி 46 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 112 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுல் 8 ரன்களில் அவுட் ஆனார் இருப்பினும் புஜாரா மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் நிதானமான ஆட்டத்தை விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ரோகித் சர்மா சற்றுமுன் அரைசதம் அடித்தார். 152 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என மொத்தம் 59 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல புஜாரா 40 ரன்கள் எடுத்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments