Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா விதிமுறைகளை மீறிய ராபின் உத்தப்பா! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

கொரோனா விதிமுறைகளை மீறிய ராபின் உத்தப்பா! அப்படி என்ன செய்தார் தெரியுமா?
, வியாழன், 1 அக்டோபர் 2020 (12:36 IST)
ராஜஸ்தான் அணியின் வீரர் ராபின் உத்தப்பா நேற்றைய போட்டியில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு பலத்த பாதுகாப்போடு ஐபிஎல் போட்டிகளை துபாயில் நடத்தி வருகிறது பிசிசிஐ. கொரோனா அச்சம் காரணமாக மைதானத்துக்குள் பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. மேலும் விளையாடும் வீரர்களுக்கும் பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அந்த விதிமுறைகளை மீறியுள்ளார் ராஜஸ்தான் அணி வீரர் ராபின் உத்தப்பா. நேற்றைய போட்டியில் அவர் பழக்க தோழத்தில் பந்தில் எச்சில் தடவி தேய்த்தது சர்ச்சைகளை உண்டாக்கியது. எச்சில் மூலமாக கொரோனா பரவும் என்பதால் அது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விதிமுறைகளை மீறியதால் உத்தப்பா மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது எச்சரிக்கை மட்டும் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்… கோச் பிளமிங் சொல்வது உண்மையா?