Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை விட சிறந்த வீரர் ரிஷப் பண்ட்… பர்த்தீவ் படேல் கருத்து!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (10:17 IST)
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பர்த்தீவ் படேல் தோனியை விட ரிஷப் பண்ட் சிறந்த ஆட்டக்காரர் எனக் கூறியுள்ளார்.

சமீபகாலமாக சிறப்பாக விளையாடிவரும் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஐபிஎல் போட்டிகளில் தலைமை தாங்கவுள்ளார். இது அவருக்குக் கூடுதல் சுமை தரும் என பலரும் கருத்து கூறிவருகின்றனர். இந்நிலையில் இப்போது ரிஷப் பண்ட் பற்றி முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பர்த்தீவ் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.

இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் ‘பலரும் பண்ட்டை தோனியுடன் ஒப்பிடுகின்றனர். அதனால் அவரே கூட தோனி போல விளையாட முயற்சித்திருக்கலாம். ஆனால் அவர் தோனியை விட சிறந்த வீரர். அவருக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைக்கக் கூடியவர். அதனால் டெல்லி அணியை அவரால் சிறப்பாக வழிநடத்த முடியும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments