Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தொடர் என் கனவுத்தொடர் – ரிஷப் பண்ட் உருக்கம்!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (16:46 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றுள்ள நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வாழ்வின் முக்கியமானத் தருணம் எனக் கூறியுள்ளார்.

இன்று பிரிஸ்பேனில் நடந்து முடிந்த பரபரப்பான டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது. மேலும் 32 ஆண்டுகளாக பிரிஸ்பென் காபா மைதானத்தில் தோல்வி அடையாத ஆஸ்திரேலியாவை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சுப்மன் கில்,உள்ளிட்டோர் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தனர்.

மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி மேட்ச் வின்னராக ஜொலித்தார் ரிஷப் பண்ட். இந்நிலையில் இன்றைய வெற்றிக்குப் பிறகு ’ என் வாழ்க்கையில் முக்கியமான தருணமாக இந்த வெற்றி இருக்கும். நான் பார்மில் இல்லாத போது எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. என் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இந்த வெற்றி இருக்கும். நான் அணிக்குள் வந்ததும் என்னை அணிக்குள் முக்கியமானவானகவும், மேட்ச் வின்னராகவும் உணரச் செயதனர். இந்திய அணியை வெல்ல வைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் நினைப்பேன். அது இன்று நிறைவேறியுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments