Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 ரன்களில் சதத்தை தவறவிட்ட ரிஷப் பண்ட்! கடைசி நாளில் போராடும் இந்தியா!

3 ரன்களில் சதத்தை தவறவிட்ட ரிஷப் பண்ட்! கடைசி நாளில் போராடும் இந்தியா!
, திங்கள், 11 ஜனவரி 2021 (09:28 IST)
சிட்னி டெஸ்ட்டின் ஐந்தாம் நாளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 97 ரன்கள் சேர்த்து அவுட் ஆகியுள்ளார்.

சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 94 ரன்கள் முன்னிலை கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று 2-வது இன்னிங்சை விளையாடியது 6 விக்கெட்கள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் அறிவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 403 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆஸி தரப்பில் அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷான் முறையே 81 மற்றும் 73 ரன்களை சேர்த்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் மற்றும் சைனி தலா 2 விக்கெட்களையும், பூம்ரா மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்டமுடிவில் 2 விக்கெட்களை இழந்து 94 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா அரைசதம் அடித்தும் கில் 31 ரன்களிலும் அவுட் ஆகினர். இதையடுத்து இந்திய அணி ஐந்தாம் நாளான இன்று தனது பேட்டிங்கை தொடர்ந்து ஆடிவந்தது. கேப்டன் ரஹானே 4 ரன்களில் ஆட்டமிழக்க, அதைத் தொடர்ந்து புஜாராவோடு ஜோடி சேர்ந்தார் ரிஷப் பண்ட்.

புஜாரா நிதானமாக விளையாட பண்ட் அதிரடியில் புகுந்து விளையாடினார். சிறப்பாக விளையாடிய அவர் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதையடுத்து சிறிது நேரத்தில் புஜாராவும் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 279 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து போராடி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சதத்தை மிஸ் செய்த ரிஷப் பண்ட்: இலக்கை நெருங்கியது இந்திய அணி!