Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்ற பெங்களூர்: முதலில் பேட்டிங் செய்ய முடிவு

Advertiesment
டாஸ் வென்ற பெங்களூர்: முதலில் பேட்டிங் செய்ய முடிவு
, ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (15:38 IST)
டாஸ் வென்ற பெங்களூர்: முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44வது போட்டி இன்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ள நிலையின் தொடக்க ஆட்டக்காரர்களான பின்ச் மற்றும் படிக்கல் களமிறங்கியுள்ளனர். முதல் ஓவரில் தீபக் சஹார் 11 ரன்கள் கொடுத்துள்ளார்.
 
இந்த நிலையில் இந்த போட்டியில் இரு அணிகளும் ஒரு சில மாற்றங்களை செய்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியை பொறுத்தவரை ஷர்துல் தாகூர் மற்றும் ஹாசில்வுட் ஆகிய இருவருக்கு பதிலாக சாண்ட்னர் மற்றும் மோனுகுமார் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
 
அதேபோல் பெங்களூரு அணியில் உடனாவுக்கு பதில் மொயின் அலி களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னைக்காவது சிஎஸ்கே ஜெயிக்குமா? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு