Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு… தோல்விக்குக் காரணம் சொன்ன ஆர் சி பி பயிற்சியாளர்!

Advertiesment
விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு… தோல்விக்குக் காரணம் சொன்ன ஆர் சி பி பயிற்சியாளர்!
, வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:16 IST)
ஆர் சி பி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் ஆர் சி பி அணி கோப்பை வெல்லாதது குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி சிறப்பாக செயல்பட்ட போது ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணிக்காக அவரால் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. இத்தனைக்கும் 3 முறை இறுதிப் போட்டிக்கு ஆர் சி பி சென்றுள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் ஆர் சி பி அணியால் ஏன் கோப்பையை வெல்ல முடியவில்லை எனக் கூறியுள்ளார். அவர் நேர்காணலில் ‘ எனக்கும் கோலிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்ளால் தான் கோப்பையை வெல்ல முடியவில்லை. அவர் சில தவறான வீரர்களை தேர்ந்தெடுத்தார். அது குறித்து நான் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. நான் 30 வீரர்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவன். ஆனால் கோலி தனித்து நிற்கும் வீரராக இருந்தார்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் முதல் போட்டி… சி எஸ் கே அணிக்காக விளையாடப்போகும் 11 பேர் இவர்களதான?