Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் நினைத்ததை எல்லாம் சாதித்துவிட்டேன்… ரவி சாஸ்திரி பெருமிதம்!

நான் நினைத்ததை எல்லாம் சாதித்துவிட்டேன்… ரவி சாஸ்திரி பெருமிதம்!
, சனி, 18 செப்டம்பர் 2021 (16:44 IST)
ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக 3 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் விரைவில் அவரின் பணிக்காலம் முடிய உள்ளது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சில ஆண்டுகள் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் கோலியின் கைப்பாவையாகதான் அவர் செயல்படுகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.  இந்நிலையில் டி 20 உலகக்கோப்பையோடு அவரின் பதவிக்காலம் முடிகிறது.

இந்நிலையில் பயிற்சியாளராக பணியாற்றியது குறித்து அவர் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ‘இந்திய அணி டி 20 உலகக்கோப்பையை வென்றால் அது மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் அதை விட பெரிய சாதனைகளை இந்திய அணி செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை தொடரை வென்றது. இங்கிலாந்தில் முன்னிலை மற்றும் எல்லா நாடுகளையும் அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியது என நான் நினைத்ததை என சாதித்துவிட்டதாக உணர்கிறேன்’ என பெருமிதமாக பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 மாதத்துக்குப் பின் களத்தில்… மகிழ்ச்சியில் நடராஜன்!