தோனிக்கு பச்சை கொடி காட்டிய பயிற்சியாளர்: ரெய்னா, யுவராஜ் வெய்டிங் லிட்ஸ்டில்!!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (14:50 IST)
2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்திய அணி தோனி இடம்பெருவார் என இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.


 
 
36 வயதான தோனி 2019 ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்பது அனைவர் மத்தியிலும் எழுந்த கேள்வியாக இருந்தது.
 
யுவராஜ் சிங்கை தேர்வு குழு ஒதுக்கி வைத்தது போல அடுத்தது தோனிதான் என்று பேசப்பட்ட நிலையில் இவர்களுக்கு இலங்கைக்கு எதிரான அதிரடி ஆட்டத்தின் மூலம் தனது பதிலதித்தார்.  
 
இந்நிலையில் 2019 உலக கோப்பையில் தோனி விளையாட வேண்டும் என்று அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது, தோனி தற்போது உடல் தகுதியிலும், ஆட்டத்திலும் நல்ல நிலையில் உள்ளார். இதனால் 2019 உலக கோப்பை வரை தோனி அணிக்கு தேவைப்படுகிறார். 
 
அவர் சிறப்பாக செயல்படும் போது மாற்று வீரர் குறித்து சிந்திக்க வேண்டியதில்லை. உலக அளவில் சிறந்த விக்கெட் கீப்பராகவும், ஒருநாள் போட்டியில் மிக சிறந்த வீரராகவும் இருக்கிறார். 
 
ரெய்னா, யுவராஜ் சிங் அணியில் இடம் பெறுவார்களா? என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. தோனியின் செயல்பாட்டில் நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments