Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனியில் வேகத்திற்கு ஈடுகொடுக்க யாருமில்லை: யார் சொல்வது தெரியுமா?

தோனியில் வேகத்திற்கு ஈடுகொடுக்க யாருமில்லை: யார் சொல்வது தெரியுமா?
, செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (21:02 IST)
உலகில் தோனியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க யாருமில்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 


 
 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
 
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, வரும் 17 ஆம் சென்னையில் துவங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய வீரர்களை பற்றி பேசியுள்ளார். அப்போது அவர் தோனியை பற்றி பின்வருமாறு கூறினார். 
 
தோனி தான் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். தற்போதுள்ள விக்கெட் கீப்பர்களில் தோனியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க இந்த உலகத்தில் யாரும் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் அவர் ஓய்வு பெற்றது மிகச்சிறந்த முடிவு. இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து தோனி என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஷ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு அவசியமா? அசாருதீன் கேள்வி!!