Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட்டின் ஷாட் செலக்‌ஷன் அணியைக் கவிழ்த்து விடுகிறது – ரவி சாஸ்திரி ஆதங்கம் !

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (10:43 IST)
ரிஷப் பண்ட் தனது சில மோசமான ஷாட் செலக்‌ஷனால் அணியையும் கவிழ்த்து விடுகிறது என இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு தோனிக்குப் பிறகு புதிய விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்க இந்திய அணி திட்டமிட்டு அவருக்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் போன ரிஷப் பண்ட் சில மோசமான ஷாட்களால் ஆட்டமிழந்து சொதப்பி வருவது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘ முதல் பந்திலேயே பண்ட் மோசமான ஷாட்களை விளையாடுவது ஏமாற்றமாக உள்ளது. அதுவும் எதிர்முனையில் கோஹ்லி போல வீரர்கள் இருக்கும்போதே அவ்வாறு விளையாடுவது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதோடு அணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாதிரி அவுட்டை அவர் தவிர்த்தால் அவரைப்போன்ற ஒரு அதிரடி வீரரைப் பார்க்க முடியாது. ஆனால் அதற்கு அவர் சூழ்நிலையைக் கணித்து விளையாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments