Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்தை ஏன் வாங்கினார் தோனி? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிசாஸ்திரி

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (08:54 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும் தோனி, அம்பயரிடம் இருந்து பந்தை வாங்கியதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற போகிறாரா? என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் எழுந்தது. 
 
இதற்கு முன்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெறும்போது அவர் ஆடிய கடைசி போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஸ்டெம்புகளை தோனி கேட்டு வாங்கினார். அதன் பின் அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அதேபோல் பந்தை வாங்கிய பின்னர் ஒருநாள் போட்டிக்கான ஓய்வு முடிவை அவர் அறிவிப்பார் என்று வதந்திகள் எழுந்தன.
 
இந்த நிலையில் தோனி பந்தை அம்பயரிடம் இருந்து வாங்கியது ஏன் என்பது குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். அம்பயரிடம் இருந்து பந்தை வாங்கி, போட்டி முடிந்த பின்னர் அந்த பந்தின் தன்மை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காகதான் என்றும்  பந்துவீச்சு பயிற்சியாளரிடம் அந்த பந்தை காண்பிக்கவே அவர் வாங்கியதாகவும், இதில் வேறு எந்த அர்த்தமும் இல்லை என்றும், தோனி ஓய்வு பெற போவதாக கூறப்படும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்றும் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

‘கோலி சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்துவிட்டார்’… முன்னாள் வீரரின் கருத்து!

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

அடுத்த கட்டுரையில்
Show comments