Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எல்: கோவை கொடுத்த இமாலய இலக்கை அசால்ட்டாக அடித்த திண்டுக்கல்

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (23:32 IST)
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடந்து வரும் நிலையில் இன்று கோவை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 185 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 86 ரன்களும், அக்கி ஸ்ரீநாத் 54 ரன்களும், ரோஹித் 26 ரன்களும் எடுத்தனர்.
 
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 190 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதுர்வேத் 72 ரன்களும், ஜெகதீசன் 66 ரன்களும் அனிருத் 25 ரன்களும் எடுத்தனர். 
 
இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இன்று காரைக்குடி அணியும் காஞ்சிபுரம் அணியும் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments