Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேற்றையப் போட்டியில் வாரி வழங்கிய ரஷித் கான் – புதிய சாதனை !

Advertiesment
இயான் மோர்கன்
, புதன், 19 ஜூன் 2019 (12:03 IST)
நேற்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் ரஷித் கான் மோசமாகப் பந்து வீசி 110 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் இங்கிலாந்து 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பவுலரும் உலகின் தற்போதைய சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் திகழும் ரஷித் கானின் ஓவரை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கியுள்ளனர்.

இந்தப் போட்டியில் ரஷித் கான் வீசிய 9 ஓவர்களில் 110 ரன்கள் கொடுத்துள்ளார். உலகக்கோப்பையில் ஒருவர் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். மேலும் இந்தப் போட்டியில் ரஷித் கானின் ஓவரில் மட்டும் மோர்கன் 7 சிக்ஸர்களைப் பறக்கவிட்டுள்ளார். ஒரு பேட்ஸ்மேன் ஒரு பவுலரின் ஓவரில் அடித்த அதிகபட்ச சிக்ஸர் இதுவாகும். ரஷித் கானின் ஓவரில் 11 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இந்தப் போட்டியில் ரஷித் கானின் எகானமி 12.22 ஆகும். இதுவே அவரது மோசமானப் பந்து வீச்சாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விளையாட சான்ஸ் தாங்க: பிசிசிசி-க்கு யுவராஜ் கடிதம்!