Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐதராபாத் வெற்றியால் நான்கு அணிகளுக்கு சிக்கல்?

ஐதராபாத் வெற்றியால் நான்கு அணிகளுக்கு சிக்கல்?
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (06:47 IST)
ஐதராபாத் வெற்றியால் நான்கு அணிகளுக்கு சிக்கல்?
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியை வெற்றி அடைந்ததால் நான்கு அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
தற்போதைய நிலையில் ஐபிஎல் புள்ளி பட்டியலில் சென்னை மற்றும் டெல்லி 16 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. மூன்றாவது இடத்தில் பெங்களூர் அணி 12 புள்ளிகளுடன் உள்ளது.
 
இதனை அடுத்து கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகளும் தலா 8 புள்ளிகள் பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, சென்னை டெல்லி மற்றும் பெங்களூரு அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டதாகவே கருதப்படுகிறது. இந்த தொடரில் தகுதி பெறும் நான்காவது அணி எது என்பதை இனிவரும் போட்டிகளில் தான் உறுதிசெய்யும்
 
கொல்கத்தா பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகளில் ஒரு அணி தகுதி பெறும் என்பது குறிப்பிடதக்கது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் 10 புள்ளிகளுடன் மிக எளிதில் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கும். ஆனால் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதையடுத்து தற்போது நான்கு அணிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்;2021; ஹைதராபாத் அணி வெற்றி