Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்திரேலியாவை மழை காப்பாற்றும்: சமூக வலைத்தளங்களில் கிண்டல்

ஆஸ்திரேலியாவை மழை காப்பாற்றும்: சமூக வலைத்தளங்களில் கிண்டல்
, வியாழன், 21 செப்டம்பர் 2017 (06:59 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.



 
 
இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுமே அபாரமாக இருப்பதால் இப்போதைய இந்திய அணியை தோற்கடிப்பது என்பது ஆஸ்திரேலியாவுக்கு சவாலான ஒன்று
 
குறிப்பாக ஹர்திக் பாண்டியாவை கட்டுப்படுத்துவது ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களுக்கு கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே இந்த தொடரை இந்தியா நிச்சயம் கைப்பற்றிவிடும் என்றே கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று கொல்கத்தாவில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவிருக்கும் நிலையில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை பயமுறுத்தி வருகிறது. மழை வந்தால் மட்டுமே ஆஸ்திரேலியா அணி காப்பாற்றப்படும் என சமூக வலைத்தளங்களில் கிண்டல் பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி