Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகமதாபாத் மைதானத்தில் மழை.. ஆடாமல் ஜெயிக்குமா குஜராத்?

Webdunia
ஞாயிறு, 28 மே 2023 (19:13 IST)
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி என்று சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே அகமதாபாத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் மழை காரணமாக தாமதமாக தொடங்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கும் என்றும் ஆனால் முழுமையாக மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுத்த அணி என்ற வகையில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் பெற்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
எனவே வருண பகவான் இன்று மனது வைப்பாரா? அல்லது ஆடாமல் குஜராத் அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments