Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளிக்கு நான் கேரண்டி: பிவி சிந்து

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (17:41 IST)
ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த போட்டிகளுக்கு சாய்னா மற்றும் பிவி சிந்து தகுதி பெற்றிருந்தனர். 
 
அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால் தோல்வி அடைந்து, வெண்கல பதக்கத்தோடு வெளியேறினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில், பிவி சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். 
 
பிவி சிந்து, முதல் செட்டைகைப்பற்றினார். அகானே யமகுச்சி 2 வது செட்டை கைப்பற்றினார். மூன்றவாது செட்டை கைப்பாற்றி சிந்து அசத்தினார். இதன் மூலம் 21-17, 15-21, 21-10 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து. 
 
இதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் சிந்து. நாளைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டால் தங்க பதக்கம் கிடைக்க கூடும். இதற்கு முன்னர் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் சிந்து இறுதி போட்டிக்கு சென்று தங்க பதக்கத்தை நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments