Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பி.வி.சிந்துவை ஏலம் எடுத்த விஜயகாந்த் மகன்

பி.வி.சிந்துவை ஏலம் எடுத்த விஜயகாந்த் மகன்
, வியாழன், 10 நவம்பர் 2016 (17:08 IST)
பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடர் இரண்டாவது சீசனில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்கு பி.வி.சிந்து 39 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார். அவரை சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் உரிமையாளர் விஜயகாந்தின் மகன் விஜய் பிராபகர் ஏலத்துக்கு எடுத்துள்ளார்.




 

பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடர் இரண்டாவது சீசன் வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, லக்னோ, ஆகிய 6 அணிகள் பங்கேற்க உள்ளன.
 
கடந்த ஆண்டு நடைப்பெற்ற பிபிஎல் போட்டியில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்காக பி.வி.சிந்து ஒப்பந்தம் செய்யப்பட்டார். பி.வி.சிந்து தோல்வி அடைந்தாலும் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி வெற்றிப்பெற்றது.
 
அதில் பெறப்பட்ட தொகையை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் என்று சென்னை ஸ்மாஷர்ஸ் அணி உரிமையாலர் விஜய் பிரபாகர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதே போல் இந்த முறையும் பி.வி.சிந்துவை சென்னை ஸ்மாஷர்ஸ் அணி உரிமையாளர் விஜய் பிரபாகர் 39 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 கேட்சுகளை மிஸ் செய்த இந்தியா - 3 சதம் விளாசி இங்கிலாந்து அதிரடி