Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்த பி.வி.சிந்து

பிரதமர் மோடிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்த பி.வி.சிந்து
, திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (19:50 IST)
சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 3ஆம் தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் சகோதர சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களுக்கு கையில் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிரபல பேட்மின்டன் விளையாட்டு வீராங்கனை பிவி சிந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் ஒன்று இந்த புனித நாளான ரக்ஷா பந்தன் நாளில் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
 
மேலும் நீங்கள் நாட்டின் நலனுக்காக செய்த செயல்கள் அனைத்திற்கும் மிகவும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கொரோனா காலத்தில் எங்களால் ஒலிம்பிக் போட்டியில் விளையாட முடியவில்லை ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் விளையாடி பதக்கங்களை வென்று உங்களுக்கு பரிசாக வழங்குவோம் என்று நம்புகிறேன் என்றும் பிவி சிந்து குறிப்பிட்டுள்ளார்.
 
கொரோனா வைரஸ் காரணமாக டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டியில் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது ஏற்கனவே தெரிந்ததே

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் மன்னிப்பு – பிசிசிஐ