Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதத்தை மிஸ் செய்த புஜாரா…. நான்காம் நாளில் இந்தியாவுக்கு அதிர்ச்சி!

சதத்தை மிஸ் செய்த புஜாரா…. நான்காம் நாளில் இந்தியாவுக்கு அதிர்ச்சி!
, சனி, 28 ஆகஸ்ட் 2021 (16:17 IST)
நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சற்று நேரத்திலேயே புஜாரா மேற்கொண்டு  ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆனால் இங்கிலாந்து அணி மிக அபாரமாக விளையாடி 432 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுதாரித்து நிதானமாக விளையாட ஆரம்பித்தது. நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 211 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. புஜாரா 91 ரன்களுடனும் கோலி 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே புஜாரா 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தற்போது புஜாராவும் கோலியும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 229 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் மைதானத்துக்குள் புகுந்த ஜார்வோ… பேட் செய்வேன் என அடம்பிடித்து அழிச்சாட்டியம்!