Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: புனே அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர்

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (22:20 IST)
புரோ கபடி போட்டி தொடர் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் ஜெய்ப்பூர் மற்றும் புனே அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெய்ப்பூர் அணி ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. 
 
ஜெய்ப்பூர் அணி வீரர்கள் ரெய்டில் மட்டும் அதிக புள்ளிகளை எடுத்து முன்னேறினர். இறுதியில் ஜெய்ப்பூர் அணி 33 புள்ளிகளும், புனே அணி 25 புள்ளிகள் எடுத்ததால் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது 
 
இன்றைய போட்டியின் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் டெல்லி அணி 26 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. பெங்கால் அணி 25 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் ஜெய்பூர் அணியும் 25 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.
 
பெங்களூர் அணி 22 புள்ளிகளும், ஹரியானா 21 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் 20 புள்ளிகள் எடுத்து நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
நாளை மும்பை - பாட்னா அணிகளும், குஜராத் - ஜெய்ப்பூர் அணிகளும் மோதவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments