Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றைய புரோ கபடி போட்டிகள்: இன்று வெற்றி பெற்ற அணிகள்

Advertiesment
இன்றைய புரோ கபடி போட்டிகள்:  இன்று வெற்றி பெற்ற அணிகள்
, ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (22:22 IST)
2019 ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் மூன்று வாரம் முடிவடைந்து நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஹரியானா மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன 
 
இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஹரியானா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே இரு அணிகளும் சரிசமமாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில், ஹரியானா அணி 33 புள்ளிகளும் பெங்களூரு அணி 30 புள்ளிகளும் பெற்றதால் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா அணி வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து நடைபெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30 புள்ளிகளும் குஜராத்தில் 24 புள்ளிகளும் எடுத்ததால் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது 
 
இன்றைய இரண்டு போட்டிகளின் முடிவிற்குப் பின்னர் டெல்லி அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்திலும் பெங்களூரு அணி 21 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் ஜெய்ப்பூர் அணி மற்றும் தமிழ்தலைவாஸ் அணிகள் 20 புள்ளிகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸை தோற்கடிக்குமா இந்தியா – இன்று மோதல்