Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2019: டெல்லி, ஹரியானா அணிகள் வெற்றி!

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (06:55 IST)
புரோ கபடி போட்டிகள் ஆறாவது வாரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஹரியானா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன 
 
 
முதலில் நடைபெற்ற போட்டியில் ஹரியானா மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த ஹரியானா வீரர்கள் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று முன்னணியில் வந்தனர். இறுதியில் ஹரியானா அணி 41 புள்ளிகளையும் குஜராத் அணி 25 புள்ளிகளையும் பெற்றதால் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா அணி வெற்றி பெற்றது 
 
 
இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி அபாரமாக விளையாடி 40 புள்ளிகளையும் மும்பை அணி 24 புள்ளிகளையும் பெற்றதால் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வெற்றி பெற்றது
 
நேற்றைய போட்டியின் முடிவுக்குப் பின்னர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய அணிகள் முதல் மூன்று இடத்திலும், பெங்கால், பெங்களூரு, மும்பை ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடத்தில் உள்ளன. இன்று தமிழ் தலைவாஸ் அணிக்கும் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கும் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments