Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறுதி கட்டத்தை நெருங்கிய புரோ கபடி: அடுத்த சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி?

இறுதி கட்டத்தை நெருங்கிய புரோ கபடி: அடுத்த சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி?
, திங்கள், 24 டிசம்பர் 2018 (22:00 IST)
கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த புரோ கபடி லீக் போட்டிகள் வரும் 27ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. மொத்தம் 132 லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில் தற்போது வரை 125 போட்டிகள் முடிந்துவிட்டது. இன்னும் 7 போட்டிகள் மட்டுமே மீதியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்றுக்கு மும்பை, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய அணிகள் 'ஏ' பிரிவில் இருந்து தகுதி பெற்றுள்ளன. 'பி' பிரிவில் பெங்களூரு மற்றும் பெங்கால் அணிகள் தகுதி பெற்றுவிட்டாலும் இன்னொரு அணி இனிமேல்தான் அறிவிக்கப்படவுள்ளது. இருப்பினும் கடைசி இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பே இல்லை.


webdunia
பிளே ஆப் சுற்றுக்கள் வரும் 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. பிளே ஆப் சுற்றூக்கு பின் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி மும்பையில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி முடிந்ததும் 2018ஆம் ஆண்டின் சாம்பியன் யார்? என்பது தெரியவரும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி-20 போட்டி: இந்திய அணி மீண்டும் 'தல'