Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமீரகம் சென்ற இரண்டு அணி வீரர்கள்…. களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

அமீரகம் சென்ற இரண்டு அணி வீரர்கள்…. களைகட்டும் ஐபிஎல் திருவிழா!
, வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (10:08 IST)
அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணி வீரர்கள் அமீரகம் சென்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் ஒருவழியாக செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது. ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் சற்றுமுன் அளித்த பேட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இதற்காக அனைத்து அணி வீரர்களும் தயாராகி வந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணி வீரர்கள் அமீரகம் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து சி எஸ் கே அணி வீரர்கள் நாளை சிறப்பு விமானத்தில் புறப்பட உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள தமிழக வீரருக்கு திருமணம்: வாழ்த்து கூறிய சன்ரைசர்ஸ் அணி