Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல விளையாட்டு வீரர் கைது ! போலீஸார் அதிரடி

பிரபல விளையாட்டு வீரர் கைது ! போலீஸார் அதிரடி
, வியாழன், 7 அக்டோபர் 2021 (16:28 IST)
பிரேசில் நாட்டில் நடந்த கால்பந்து போட்டியின்போது நடுவரை தலையால் முட்டிய வீரர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்டே என்ற பகுதியில் கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதில், சாபாலே என்ற அணியுடன்  குவாரணி என்ற அணியும் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ரோட்ரிகோ கிரிவெல்லரே என்பவர் நடுவராக இருந்தார். அப்போது, வில்லியம் ரிபிரோவுக்கு அவர் ஃபீ கிக் கொடுக்க மறுத்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில்,கோபம் அடைந்த வில்லியம் ரிபிரோ நடுவரை தலையால் முட்டினார். இதில் நடுவர் கிழே சரிந்தார். உடனே அருகே இருந்த சக வீரர்கள் நடுவரை ஈட்டு மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றனர். இதையடுத்து, வில்லியம் ரிபிரோ என்பவர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி சிஎஸ்கேவுக்காக விளையாடுவேனா என்பது தெரியாது: தோனி