Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முக்கியமான போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தக் கூடாது… பீட்டர்சன் ஆதங்கம்!

முக்கியமான போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தக் கூடாது… பீட்டர்சன் ஆதங்கம்!
, செவ்வாய், 22 ஜூன் 2021 (08:52 IST)
முக்கியமான ஐசிசி இறுதிப் போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தக்கூடாது என இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மழை காரணமாக இதுவரை இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் போட்டி நடந்த இரண்டு நாட்கள் கூட மழையால் ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்தது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன் தனது டிவீட்டில் ‘ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்தான். ஆனாலும் ஐசிசி நடத்தும் தொடர்களின் முக்கியமானப் போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தக் கூடாது’ எனக் கூறியுள்ளார். இங்கிலாந்தின் வானிலையைக் கணக்கில் கொண்டு அவர் அப்படி சொல்லியுள்ள பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி...மழையால் ரத்து !