Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டி.! இந்திய ஆண்கள் அணி காலிறுதிக்கு நேரடி தகுதி.!!

Senthil Velan
வியாழன், 25 ஜூலை 2024 (21:34 IST)
பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி நேரடியாக கால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
 
பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டிக்கான முதன்மை சுற்றுகள் ஜூலை 30-ம் தேதி தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு தரவரிசை பெறுவதற்கான சுற்று இன்று நடைபெற்றது. அதன்படி இன்று  பெண்களுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள்  4-வது இடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றனர். 
 
இந்நிலையில் ஆண்களுக்கான போட்டியில் இந்தியாவின் திராஜ் பொம்மாதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். திராஜ் பொம்மாதேவரா 681 புள்ளிகளும், தருண்தீப் ராய் 674 புள்ளிகளும், பிரவீன் ரமேஷ் ஜாதவ் 658 புள்ளிகளும் பெற்றனர். 

ALSO READ: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.! மேலும் ஒரு வழக்கறிஞர் கைது.!!
 
மொத்தமாக 2013 புள்ளிகள் பெற்று இந்திய அணியினர் 3-வது இடம் பிடித்தனர். இதனால் ஆண்கள் அணி காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது.  தென்கொரியா 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீரர்களை ஆழ்கடலில் தள்ளிவிடுவது போன்றது- முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் கம்பீர்!

கங்குலி பயோபிக்கில் நடிக்க பதற்றமாக உள்ளது… பிரபல நடிகர் பதில்!

ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி… தோல்விப் பாதையில் இந்தியா!

350 ரன்களுக்கு மேல் இலக்கு… இரண்டு முறையும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

இந்தியாவின் பீல்டிங் டெஸ்ட் தரத்தில் இல்லை.. தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments