Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை!

vinoth
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (09:28 IST)
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸில் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் 184 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத் திறனாளி வீர, வீராங்கனைகள் போட்டியிடுகின்றனர்.

இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் 32 பெண் வீராங்கனைகள் உட்பட 84 பேர் கலந்து கொள்கிறார்கள். கடந்த வாரம் இந்த போட்டிகள் தொடங்கிய நிலையில் தற்போது தமிழக வீராங்கனை நிதயஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பேட்மிண்ட்டன் வீராங்கனையான நித்யஸ்ரீ இந்தோனேஷியா வீராங்கனையான ரினா மர்லினாவை 21-14, 21-16 ஆகிய செட் கணக்குகளில் வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். ஏற்கனவே தமிழக வீராங்கனைகளான துளசிமதி மற்றும் மனிஷா ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments