Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்குக் கடைசி வாய்ப்பு – ஆப்கானிஸ்தானோடு இன்று மோதல் !

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (12:34 IST)
இன்று பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானோடு மோத இருக்கிறது. இந்த போட்டியே பாகிஸ்தானுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பாகும்.

உலகக்கோப்பையின் லீக் போட்டிகள் கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டன. கிட்டத்தட்ட அரையிறுதிக்கு செல்லும் 3 அணிகள் உறுதியாகிவிட்டன. நான்காவதாக செல்லும் அணிக்காக இங்கிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையில் கடுமையானப் போட்டி நிலவுகிறது.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து பாகிஸ்தான் ஆகிய அணிகள் இனிவரும் போட்டிகளில் தோற்கவேண்டும். அப்போதுதான் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லமுடியும்.

இதையடுத்து இன்று பாகிஸ்தான் வலிமை குறைந்த ஆப்கானிஸ்தான் அணியோடு மோத இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் மிகப்பெரிய மாரிஜினலோ அல்லது அதிக விக்கெட் வித்தியாசத்திலோ வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் ரன்ரேட் அதிகரிக்க முடியும். இதனால் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் தனது முழு திறமையையும் காட்டி விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments